Total Pageviews

Friday, June 1, 2012

கருணாநிதி பிறந்தநாள் விழா: கனிமொழி சென்னை செல்ல சிபிஐ நீதிமன்றம் அனுமதி

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க சென்னை செல்வதற்கு திமுக எம்பி கனிமொழிக்கு சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் திமுக எம்பி கனிமொழிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கடந்தாண்டு நவம்பர் 28ம் தேதி ஜாமீன் வழங்கியது. அப்போது, அவர் முன் அனுமதியின்றி தமிழ்நாடு செல்லக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா வரும் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்க சென்னை செல்ல அனுமதிக்கும்படி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கனிமொழி மனு செய்தார். இதை நேற்று விசாரித்த நீதிபதி ஷைனி, கனிமொழி சென்னை செல்ல அனுமதி வழங்கினார். மேலும், ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராவதில் இருந்தும் விலக்கு அளித்து உத்தரவிட்டார்.