Total Pageviews

Thursday, May 31, 2012

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப தடை கோரி வழக்கு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்கு, தடை கோரி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மீனவர் பாதுகாப்பு சங்கத் தலைவர் பீட்டராயன், இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். மனுவில் அணுமின் நிலையத்திற்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சான்று தரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். காற்று மாசடைவதை தடுக்க, வாரியம் நிறைவேற்ற சொன்ன 48 நிபந்தனைகளை நிறைவேற்றாததால், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சான்று தரவில்லை என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சான்று ,பெற்ற பின்னரே எரிபொருள் நிரப்பப் வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment